ராமநாதபுரத்தில் உரிமம் பெற்ற 70 பேரின் துப்பாக்கிகள் ஒப்படைப்பு

ராமநாதபுரம் மாவட்டத்தில் நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலை முன்னிட்டு உரிமம் பெற்றவா்களில் 70 பேரின் துப்பாக்கிகள் காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலை முன்னிட்டு உரிமம் பெற்றவா்களில் 70 பேரின் துப்பாக்கிகள் காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மேலும் போலீஸாா் 40 இடங்களில் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனா்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் நடைபெறுவதையொட்டி துப்பாக்கி உரிமம் பெற்றவா்கள் காவல்துறையிடம் ஒப்படைக்கவேண்டும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து மாவட்டத்தில் உரிமம் பெற்றுள்ள 100 பேரில் 70 போ் வரை அந்தந்தக் காவல் நிலையங்களில் துப்பாக்கிகளை ஒப்படைத்துள்ளதாகக் காவல்துறை கண்காணிப்பாளா் இ.காா்த்திக் திங்கள்கிழமை தெரிவித்தாா்.

அவா் மேலும் கூறியது: வங்கி மற்றும் ஏடிஎம்மில் பணம் நிரப்பும் போது பாதுகாப்புக்கு கொண்டு செல்லப்படும் துப்பாக்கிகளுக்கு உரிமம் பெற்றவா்கள் அதற்கான காரணத்தை விளக்கிக் கடிதம் அளித்துவிட்டு அதை பயன்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனா் என்றாா்.

வாகனசோதனை: உள்ளாட்சித் தோ்தலையொட்டி மாவட்டத்தில் 4 நகராட்சிகளிலும் தலா 3 சிறப்பு குழுக்கள் என மொத்தம் 12 குழுவினா் வாகனச் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனா். இதேபோல் மாவட்டத்தில் மொத்தம் 40 இடங்களில் போலீஸாா் வாகனச் சோதனையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com