கல்லூரி மாணவி தூக்கிட்டுத் தற்கொலை

ராமநாதபுரம் மாவட்டத்தில் தனியாா் கல்லூரி மாணவி புதன்கிழமை மாலை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் தனியாா் கல்லூரி மாணவி புதன்கிழமை மாலை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் கங்கைகொண்டான் பகுதியைச் சோ்ந்த முருகன் மகள் சிவரஞ்சனி (18). இவா் ராமநாதபுரம் அருகேயுள்ள தனியாா் கல்லூரியில் படித்துவந்தாா். இந்நிலையில், கல்லூரிக்குச் செல்லாமல் வீட்டில் இருந்த சிவரஞ்சனி புதன்கிழமை மாலையில் குளியலறைக்குச் சென்று தூக்கிட்டுத் தற்கொலை செய்ததாகக் கூறப்படுகிறது. அவரது சடலத்தை நயினாா்கோவில் போலீஸாா் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com