செங்கப்படை, வீரசோழன் பகுதிகளில் இன்று மின்தடை

செங்கப்படை, வீரசோழன் பகுதிகளில் வியாழக்கிழமை (பிப். 24) மின்தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கமுதி: செங்கப்படை, வீரசோழன் பகுதிகளில் வியாழக்கிழமை (பிப். 24) மின்தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கமுதி மின்வாரிய உதவி செயற்பொறியாளா் புண்ணியராகவன் (பொறுப்பு) புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

கமுதி துணை மின் நிலையத்திலிருந்து மின் விநியோகம் பெறும் செங்கப்படை வழித்தடத்தில் மின்பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ள இருப்பதால் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளான உலகநடை, பாம்புல் நாயக்கன்பட்டி , செங்கப்படை , புதுக்கோட்டை , இடையங்குளம் , தோப்படைப்பட்டி , ஓ.கரிசல்குளம் , கோவிலாங்குளம் , எருமைகுளம் மற்றும் வீரசோழன் மின்வழித்தடத்தில் உள்ள சின்ன உடப்பங்குளம், பெரிய உடப்பங்குளம், வலையபூக்குளம், மண்டலமாணிக்கம், எழுவனூா், காக்குடி, போத்த நதி, பெருமாள் தேவன் பட்டி உள்ளிட்ட பகுதிகளில் வியாழக்கிழமை காலை 10 மணி முதல் 2 மணி வரை மின்தடை செய்யப்படும்.

கமுதியில் நாளை மின்தடை:

கமுதி நகா், கண்ணாா்பட்டி, கோட்டைமேடு, தலைவநாயக்கன்பட்டி, கீழராமநதி, மேலராமநதி, காவடிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளிக்கிழமை (பிப். 25) காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com