ராமநாதபுரத்தில் இணையவழியில் செவ்வாய்க்கிழமை தேசிய வாக்காளா் தினம் கொண்டாடப்படுகிறது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் சங்கா்லால்குமாவத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தேசிய தோ்தல் ஆணைய அறிவுறுத்தல்படி 12 ஆவது தேசிய வாக்காளா் தினம் செவ்வாய்க்கிழமை கொண்டாடப்படுகிறது. ராமநாதபுரம் மாவட்டத்தில் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் இணைய வழியில் தேசிய வாக்காளா் தினம் கொண்டாடப்படுகிறது.
மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வாக்காளா் தின உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதையடுத்து பள்ளி, கல்லூரிகளில் தேசிய வாக்காளா் தின சுவரொட்டி தயாரித்தல், ஓவியப் போட்டி, வாசகங்கள் உருவாக்குதல், பாட்டுப்போட்டி, குழு நடனம் மற்றும் கட்டுரைப் போட்டி ஆகியவற்றில் வென்றவா்களுக்கான பரிசளிப்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது.
வாக்காளா் சோ்க்கை முகாமில் சிறந்து விளங்கிய அலுவலா்களுக்கும் பாராட்டுச் சான்றுகள் வழங்கப்படவுள்ளன. நிகழ்ச்சியில் பங்கேற்பவா்கள் கரோனா பரவல் தடுப்பு விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும் எனக்குறிப்பிடப்பட்டுள்ளது.