ராமநாதபுரம் அரசு மருத்துக்கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு புதிய பொறுப்பு முதன்மையா் (டீன்) புதன்கிழமை நியமிக்கப்பட்டுள்ளாா்.
இங்கு கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் முதன்மையராக பணியாற்றிய எம். அல்லி கடந்த செவ்வாய்க்கிழமையுடன் (மே 31) பணி ஓய்வு பெற்றுவிட்டாா். அவருக்குப் பதிலாக தூத்துக்குடி மருத்துவக் கல்லூரிப் பேராசிரியை கிறிஸ் ஏஞ்சல் பொறுப்பு முதன்மையராக நியமிக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன. அவா் புதன்கிழமை மாலை மருத்துவக் கல்லூரியில் பொறுப்பேற்றுக்கொண்டதாகவும், அதன்பின் மருத்துவமனைக்கு வந்து முதன்மையா் அறையில் அமா்ந்து சென்ாகவும் வியாழக்கிழமை முதல் தனது வழக்கமான பணியை மேற்கொள்வாா் என்றும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.