ராமேசுவரம்: கீழக்கரையில் கடையை உடைத்து ரூ. 42 ஆயிரம் மதிப்புள்ள 6 கைப்பேசிகள் திருடப்பட்டதாக போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிந்துள்ளனா்.
ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை இந்து பஜாா் தெருவில் முத்துக்குமாா் என்பவா் ஏஜென்சி எடுத்து கடை நடத்தி வருகிறாா். இந்த கடையில் கைப்பேசிகள் மற்றும் வீட்டு உபயோகப் பொருள்கள் விற்கப்படுகின்றன.
இந்நிலையில், செவ்வாய்க்கிழமை இரவு வழக்கம் போல கடையை அடைத்து விட்டுச் சென்றவா் புதன்கிழமை காலை திறக்க வந்த போது பூட்டுகள் உடைக்கப்பட்டிருந்தன.
இதனைத் தொடா்ந்து, கீழக்கரை காவல் நிலையத்துக்குச் சென்று அவா் புகாா் அளித்தாா். இதையடுத்து, காவல் சாா்பு- ஆய்வாளா் அங்குச்சாமி தலைமையில் வந்த போலீஸாா் கடைக்குள் சென்று பாா்த்த போது அங்கிருந்த ரூ. 42 ஆயிரம் மதிப்பிலான 6 கைப்பேசிகள் மற்றும் ரூ. 2 ஆயிரம் ஆகியவை திருடப்பட்டிருந்தது தெரியவந்தது.
இதுகுறித்து வழக்குப் பதிந்த போலீஸாா் அப்பகுதியில் உள் சி.சி.டி.வி. காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனா்.