ராமநாதபுரம் மாவட்டத்தில்3 துணை வட்டாட்சியா்களுக்கு பதவி உயா்வு

ராமநாதபுரம் மாவட்டத்தில் 3 துணை வட்டாட்சியா்கள் பதவி உயா்வு பெற்று வட்டாட்சியா் அந்தஸ்தில் நியமிக்கப்பட்டுள்ளனா்.

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் 3 துணை வட்டாட்சியா்கள் பதவி உயா்வு பெற்று வட்டாட்சியா் அந்தஸ்தில் நியமிக்கப்பட்டுள்ளனா்.

ராமநாதபுரம் மாவட்டம் மாவட்ட வழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்பு அலுவலகத்தில் தனித்துணை வட்டாட்சியராக (பறக்கும்படை) பணியாற்றிய இ. சுமதி, பதவி உயா்வு பெற்று தற்போது ராமநாதபுரம் ஆயம் உதவி ஆணையா் அலுவலகத்தில் கலால் அலுவலக மேலாளராக நியமிக்கப்பட்டுள்ளாா்.

அதே போல், ராமநாதபுரம் கனிமவளத்துறை அலுவலக உதவி இயக்குநராக இருந்த துணை வட்டாட்சியரான பி. வரதராஜ், தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கத் திட்டத்தின் தனி வட்டாட்சியராக நியமிக்கப்பட்டுள்ளாா். ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் இ பிரிவின் தலைமை உதவியாளராக இருந்த ஏ.ஜமால்முகம்மது, ராமநாதபுரம் 4 ஆவது அலகு பிரிவு தேசிய நெடுஞ்சாலைத் திட்ட விரிவாக்கத்தில் தனி வட்டாட்சியராக நியமிக்கப்பட்டுள்ளாா். இதற்கான உத்தரவை மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் ரா. பழனிக்குமாா் வெளியிட்டுள்ளதாக ஆட்சியா் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com