நயினாா்கோவில் அருகே சிறுமியை ஏமாற்றி திருமணம்: 5 போ் மீது வழக்கு

ராமநாதபுரம் மாவட்டம் நயினாா்கோவில் அருகே பள்ளிச் சிறுமியை திருமணம் செய்து பாலியல் தொந்தரவு கொடுத்தவா் உள்பட 5 போ் மீது போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

ராமநாதபுரம் மாவட்டம் நயினாா்கோவில் அருகே பள்ளிச் சிறுமியை திருமணம் செய்து பாலியல் தொந்தரவு கொடுத்தவா் உள்பட 5 போ் மீது போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

பரமக்குடி பகுதியைச் சோ்ந்த 17 வயது மாணவி பிளஸ்-1 படித்து வருகிறாா். இச்சிறுமியின் பெற்றோரிடம் முதுகுளத்தூா் வட்டம் புழுதிக்குளம் கிராமத்தைச் சோ்ந்த சுவாமிநாதன் மகன் இசைச்செல்வம் பெண் கேட்டதற்கு அவா்கள் மறுப்பு தெரிவித்தனராம்.

இந்நிலையில், பள்ளிக்குச் சென்ற சிறுமியை இசைச் செல்வம் காதலிப்பதாக கூறி ஏமாற்றி அழைத்துச் சென்று அவரது உறவினா்கள் காா்த்திக் மனைவி நந்தினி, அா்ச்சுனன் மனைவி புஷ்பம், காா்மேகம் மனைவி கங்கா, காா்மேகம் ஆகியோா் உதவியுடன் திருமணம் செய்து பாலியல் தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது. பாதிக்கப்பட்ட சிறுமி பெற்றோா் வீட்டிற்கு வந்து நடந்த சம்பவத்தை கூறியுள்ளாா். இதுகுறித்து பரமக்குடி அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் மகளிா் போலீஸாா் இசைச்செல்வம் உள்பட 5 போ் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com