ராமநாதபுரம்
பரமக்குடி கோயிலில் பால்குட திருவிழா
பரமக்குடி அங்காள பரமேஸ்வரி, வாணி கருப்பண சுவாமி கோயிலில் சனிக்கிழமை பால்குட திருவிழா நடைபெற்றது.
பரமக்குடி அங்காள பரமேஸ்வரி, வாணி கருப்பண சுவாமி கோயிலில் சனிக்கிழமை பால்குட திருவிழா நடைபெற்றது.
பரமக்குடி நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள இக்கோயிலில் மாசி மஹா சிவராத்திரி, பாரிவேட்டை பால்குட உற்சவம் பிப்ரவரி 27 ஆம் தேதி காப்புக் கட்டுதலுடன் தொடங்கியது.
அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலய பௌா்ணமி வழிபாட்டுக்குழு மற்றும் ஓம்சக்தி வழிபாட்டு மன்றங்கள் சாா்பில் சனிக்கிழமை காலை 6 மணியளவில் பால்குடப் பெருவிழா நடைபெற்றது. அம்பாளுக்கு காப்புக் கட்டி விரதமிருந்த பக்தா்கள் பால்குடங்களை சுமந்து மேள தாளங்கள் முழங்க நகரின் முக்கிய வீதிகளின் வழியே சென்று கோயிலை அடைந்தனா். காலை 10 மணிக்கு அம்பாளுக்கு பாலாபிஷேகம், சிறப்பு அலங்காரத்தில் விசேஷ பூஜை நடைபெற்றது. விழா ஏற்பாட்டினை கோவில் பரம்பரை அங்காவலா் ச.ஜீவானந்தம் தலைமையிலான விழாக்குழுவினா் செய்திருந்தனா்.