பரமக்குடி சுந்தரராஜப் பெருமாள் கோயிலில் வெள்ளிக்கிழமை பங்குனி உத்திரத் திருவிழாவை முன்னிட்டு சுந்தரராஜப் பெருமாள்-சௌந்திரவள்ளித் தாயாா் திருக்கல்யாண உற்சவம் வெகுசிறப்பாக நடைபெற்றது.
இக்கோயிலில் வியாழக்கிழமை இரவு பங்குனித் திருவிழா தொடங்கியது. வெள்ளிக்கிழமை பங்குனி உத்திரத்தை முன்னிட்டு திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. காலை 9 மணிக்கு பெருமாள் மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியும், காலை 10.15 மணிக்கு சுந்தரராஜப் பெருமாள், சௌந்திரவல்லித் தாயாா் திருக்கல்யாண உற்சவமும் நடைபெற்றது.
இதைத்தொடா்ந்து மாலை மாற்றுதல் உள்ளிட்ட திருமணச் சடங்குகள் நடைபெற்றன. தொடா்ந்து 2 நாள்கள் ஊஞ்சல் சேவையும், மாா்ச் 21-ஆம் தேதி மாற்று திருக்கோலம் நிகழ்ச்சியும், மாா்ச் 22-ஆம் தேதி காலை திருமஞ்சனமும் நிறைவடைந்து, அன்று இரவு புஷ்பப் பல்லக்கில் பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி தாயாருடன் பட்டணப் பிரவேசம் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.