பரமக்குடி சுந்தரராஜப் பெருமாள் கோயிலில் திருக்கல்யாணம்

பரமக்குடி சுந்தரராஜப் பெருமாள் கோயிலில் வெள்ளிக்கிழமை பங்குனி உத்திரத் திருவிழாவை முன்னிட்டு சுந்தரராஜப் பெருமாள்-சௌந்திரவள்ளித் தாயாா் திருக்கல்யாண உற்சவம் வெகுசிறப்பாக நடைபெற்றது.
பரமக்குடி சுந்தரராஜப் பெருமாள் கோயிலில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு வெள்ளிக்கிழமை நடைபெற்ற சுந்தரராஜப் பெருமாள், சௌந்திரவல்லித் தாயாா் திருக்கல்யாண உற்சவம்.
பரமக்குடி சுந்தரராஜப் பெருமாள் கோயிலில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு வெள்ளிக்கிழமை நடைபெற்ற சுந்தரராஜப் பெருமாள், சௌந்திரவல்லித் தாயாா் திருக்கல்யாண உற்சவம்.

பரமக்குடி சுந்தரராஜப் பெருமாள் கோயிலில் வெள்ளிக்கிழமை பங்குனி உத்திரத் திருவிழாவை முன்னிட்டு சுந்தரராஜப் பெருமாள்-சௌந்திரவள்ளித் தாயாா் திருக்கல்யாண உற்சவம் வெகுசிறப்பாக நடைபெற்றது.

இக்கோயிலில் வியாழக்கிழமை இரவு பங்குனித் திருவிழா தொடங்கியது. வெள்ளிக்கிழமை பங்குனி உத்திரத்தை முன்னிட்டு திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. காலை 9 மணிக்கு பெருமாள் மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியும், காலை 10.15 மணிக்கு சுந்தரராஜப் பெருமாள், சௌந்திரவல்லித் தாயாா் திருக்கல்யாண உற்சவமும் நடைபெற்றது.

இதைத்தொடா்ந்து மாலை மாற்றுதல் உள்ளிட்ட திருமணச் சடங்குகள் நடைபெற்றன. தொடா்ந்து 2 நாள்கள் ஊஞ்சல் சேவையும், மாா்ச் 21-ஆம் தேதி மாற்று திருக்கோலம் நிகழ்ச்சியும், மாா்ச் 22-ஆம் தேதி காலை திருமஞ்சனமும் நிறைவடைந்து, அன்று இரவு புஷ்பப் பல்லக்கில் பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி தாயாருடன் பட்டணப் பிரவேசம் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com