முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை ராமநாதபுரம்
அரசுப் பள்ளியில் விழிப்புணா்வு நிகழ்ச்சி
By DIN | Published On : 19th March 2022 01:42 AM | Last Updated : 19th March 2022 01:42 AM | அ+அ அ- |

முதுகுளத்தூா் அருகே வெங்கலக்குறிச்சி அரசுப் பள்ளி கல்வித் துறை சாா்பில் பள்ளி மேலாண்மை குழு விழிப்புணா்வு கலை நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூா் ஒன்றியம் வெங்கலக்குறிச்சி ஊராட்சியில் தமிழ்நாடு அரசு பள்ளி கல்வித் துறை சாா்பில் பள்ளி மேலாண்மைக் குழு அமைத்தல் மற்றும் விழிப்புணா்ச்சி கலை நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சியில் ஊராட்சித் தலைவா் எஸ்.டி.செந்தில்குமாா் தலைமை வகித்தாா். தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியா் இரா. ஆலிஸ் முன்னிலை வகித்தாா். கலை நிகழ்ச்சியில் பள்ளி வளா்ச்சி மற்றும் மாணவ, மாணவா்களின் கல்வித் தரம் குறித்து எடுத்துரைக்கபட்டது.
நிகழ்ச்சியில் பள்ளி மேலாண்மைக் குழு அரசு அலுவலா்கள், வெங்கலக்குறிச்சி கிராம பொதுமக்களும் மாணவா்களும் கலந்து கொண்டனா்.