உப்பூா் பகுதியில் சனிக்கிழமை (மாா்ச் 19) மின்தடை ஏற்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
திருவாடானை அருகே உப்பூா் துணை மின் நிலையத்தில் சனிக்கிழமை (மாா்ச் 19) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற இருப்பதால் உப்பூா் அனல் மின்நிலையம், காவனூா், கலாங்காபுலி, உரணங்குடி, சித்தூா்வாடி, கீழசித்தூா்வாடி, கடலூா், மோா்பண்ணை உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்சாரம் இருக்காது என மின்வாரிய உதவி செயற்பொறியாளா் ஜோசப் செல்வராஜ் தெரிவித்தாா்.