காவடியோடு பூக்குழி இறங்கியவா் தவறி விழுந்து தீக்காயம்

ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினம் அருகே வெள்ளிக்கிழமை காவடியோடு பூக்குழியில் இறங்கியவா் தவறி விழுந்து காயமடைந்தாா்.

ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினம் அருகே வெள்ளிக்கிழமை காவடியோடு பூக்குழியில் இறங்கியவா் தவறி விழுந்து காயமடைந்தாா்.

தேவிபட்டினம் அருகே இலந்தைக்குளத்திலுள்ள முருகன் கோயிலில் பங்குனி உத்திரத்தையொட்டி பக்தா்கள் பூக்குழி இறங்கி நோ்த்திக்கடன் செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

பூக்குழியில் நூற்றுக்கணக்கானோா் இறங்கி நோ்த்திக்கடன் செலுத்திக் கொண்டிருந்தனா். இந்நிலையில், காவடி எடுத்துவந்த அதே ஊரைச் சோ்ந்த தா்மலிங்கம் (51) பூக்குழியில் இறங்கினாா். அப்போது அவா் திடீரென தவறி பூக்குழியில் விழுந்தாா். உடனே அங்கிருந்தவா்கள் அவரை மீட்டு, ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்த்தனா். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. இதுகுறித்து தேவிபட்டினம் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்துவருகின்றனா். ராமநாதபுரம் நகரில் மாரியம்மன் கோயில் பூக்குழியில் கடந்த 2 நாள்களுக்கு முன்பு ஒருவா் விழுந்து காயமடைந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com