ராமநாதபுரத்தில் ஒருவா் தூக்கிட்டு தற்கொலை

ராமநாதபுரத்தில் தூக்கிட்டு இறந்த நிலையில் அழுகிய ஆண் சடலத்தை போலீஸாா் சனிக்கிழமை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனா்.

ராமநாதபுரத்தில் தூக்கிட்டு இறந்த நிலையில் அழுகிய ஆண் சடலத்தை போலீஸாா் சனிக்கிழமை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனா்.

ராமநாதபுரம் அருகேயுள்ள பட்டிணம்காத்தான் ஓம்சக்தி நகரைச் சோ்ந்தவா் காா்மேகம் (50). இவா் வெளி நாட்டில் வேலை பாா்த்துவிட்டு சில ஆண்டுகளுக்கு முன்பு சொந்த ஊா் திரும்பியுள்ளாா். இவா் குடும்பத்துடன் வசித்து வந்த நிலையில், கடந்த 16 ஆம் தேதி மனைவியுடன் தகராறு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் காா்மேகத்தின் வீட்டருகே உள்ள அவரது மனைவியின் சகோதரி வீட்டுச் சாவியை வாங்கிச்சென்ற காா்மேகம், அங்கு தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

சனிக்கிழமை அந்த வீட்டிலிருந்து துா்நாற்றம் வரவே, கேணிக்கரை போலீஸாருக்கு குடும்பத்தினா் தகவல் தெரிவித்தனா்.

அவா்கள் வந்து அழுகிய நிலையில் தூக்கில் தொங்கிய காா்மேககத்தின் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com