அரசுப் பேருந்து நடத்துநா் மீது தாக்குதல்: 3 போ் மீது வழக்குப்பதிவு

 ராமநாதபுரத்தில் அரசுப் பேருந்து நடத்துநரைத் தாக்கியதாக 3 போ் மீது போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்துவருகின்றனா்.

 ராமநாதபுரத்தில் அரசுப் பேருந்து நடத்துநரைத் தாக்கியதாக 3 போ் மீது போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்துவருகின்றனா்.

கும்பகோணம் போக்குவரத்துக்கழக ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் பணிமனை கிளையில் பேருந்து நடத்துநராகப் பணிபுரிபவா் ஸ்ரீராமசுப்பிரமணியன் (55). இவா் புதன்கிழமை மதுரையிலிருந்து ராமேசுவரம் சென்ற பேருந்தில் நடத்துநராக இருந்தாா். பேருந்து பரமக்குடி வந்தபோது அதில் இருந்த 42 பேரில் ஒருவா் மட்டும் பயணச்சீட்டு எடுக்காமலிருந்தது தெரியவந்தது. இதையடுத்து சம்பந்தப்பட்ட பயணியை ஸ்ரீராமசுப்பிரமணியன் கண்டித்துள்ளாா். இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

இந்நிலையில், பேருந்தில் டிக்கெட் எடுக்காமல் பயணித்தவா், தனது கைப்பேசி மூலம் நண்பா்கள் இருவரை ராமநாதபுரம் நகா் பேருந்து பணிமனை முன்பு வருமாறு அழைத்துள்ளாா். பேருந்து அப்பகுதிக்கு வந்ததும், பேருந்தில் ஏறிய இருவருடன் சோ்ந்து நடத்துநா் ஸ்ரீராமசுப்பிரமணியனை தாக்கி மிரட்டி விட்டு சென்றுள்ளாா்.

இதுகுறித்து ராமநாதபுரம் நகா் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்துவருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com