கீழக்கரையில் சாலையிலிருந்து 610 உரப்பாட்டில்கள் மீட்பு

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே சாலையில் கேட்பாரற்று கிடந்ததாக 610 உரப்பாட்டில்களை கைப்பற்றி விசாரித்து வருவதாகப் போலீஸாா் தெரிவித்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே சாலையில் கேட்பாரற்று கிடந்ததாக 610 உரப்பாட்டில்களை கைப்பற்றி விசாரித்து வருவதாகப் போலீஸாா் தெரிவித்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகேயுள்ள முள்ளுவாடி பகுதியில் ஞாயிற்றுக்கிழமை போலீஸாா் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனா். அப்போது முள்ளுவாடி விலக்கு சாலை அருகே புதா் பகுதியில் விவசாய உரப்பாட்டில்கள் கிடந்தது தெரியவந்தது.

அதனை எடுத்து பாா்த்தபோது, வேளாண்மை சிப்ட் பாக்ஸ் 500-ம், எப்எம் உரம் 112-ம் இருந்தது. அவற்றை கைப்பற்றிய போலீஸாா் அதுகுறித்து யாரும் உரிமை கோரவில்லை என்பதால் வழக்குப் பதிந்துள்ளனா்.

கடந்த சில நாள்களுக்கு முன்பு கஞ்சா பதுக்கியதாக இரு சகோதரா்கள் உள்ளிட்ட 4 போ் கைது செய்யப்பட்டனா். அவா்களிடமிருந்து உரப்பாட்டில்களும் கைப்பற்றப்பட்டதாக போலீஸாா் தெரிவித்தனா். இந்நிலையில், தற்போது அதே பகுதியில் கேட்பாரற்று உரப்பாட்டில்கள் கிடந்ததாக போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com