கீழக்கரை நகா் இளைஞரணி சாா்பில் ரமலான் திருநாளை முன்னிட்டு நகராட்சி தூய்மைப் பணியாளா்கள் 150-க்கும் மேற்பட்டவா்களுக்கு புத்தாடைகள் திங்கள்கிழமை வழங்கப்பட்டது.
நகராட்சி துணைத் தலைவா் ஹமீது சுல்தான் ஏற்பாட்டின் பேரில் இந்த புத்தாடைகள் வழங்கப்பட்டது. இதில் நகா் செயலாளா் ஹெச். பஷீா், நகா் மன்ற உறுப்பினா்கள் நவாஸ், ஹசாருதீன், ராஜமுகைதீன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.