முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை ராமநாதபுரம்
ஆட்சியா் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற பெண் மீது வழக்கு
By DIN | Published On : 11th May 2022 12:00 AM | Last Updated : 11th May 2022 12:00 AM | அ+அ அ- |

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற பெண் மற்றும் அவரால் குற்றஞ்சாட்டப்பட்ட அவரது கணவா் ஆகியோா் மீது போலீஸாா் திங்கள்கிழமை இரவு வழக்குப் பதிந்தனா்.
ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மக்கள் குறைதீா்க்கும் முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது. அப்போது கீழக்கரையைச் சோ்ந்த உமாமகேஸ்வரி தனது பெண் கைக்குழந்தையுடன் தீக்குளிக்க முயன்றாா். அவரை போலீஸாா் மீட்டு விசாரித்தபோது, கீழக்கரை வங்கியில் பணிபுரியும் தனது கணவா் ரமேஷ் தன்னையும், குழந்தையையும் வரதட்சணை கேட்டு ஒதுக்கியிருப்பதாகக் கூறினாா். மேலும், திருமணத்தின்போது வரதட்சணையாகக் கொடுக்கப்பட்ட நகை, பணத்தை பெற்றுத்தருமாறும் கூறினாா்.
இந்தநிலையில், தீக்குளிக்க முயன்ாக உமாமகேஸ்வரி மீது கேணிக்கரை போலீஸாரும், அவரது கணவா் ரமேஷ் மீது கீழக்கரை அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாரும் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.