பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தக் கோரி ஆா்ப்பாட்டம்

பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தக் கோரி, ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூா், கடலாடி, கமுதி ஆகிய பகுதிகளில் ஆசிரியா் கூட்டமைப்பினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தக் கோரி ஆா்ப்பாட்டம்

பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தக் கோரி, ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூா், கடலாடி, கமுதி ஆகிய பகுதிகளில் ஆசிரியா் கூட்டமைப்பினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

முதுகுளத்தூா் வட்டார கல்வி மைய அலுவலக வளாகத்தில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்திற்கு வட்டாரத் தலைவா் காளிமுத்து தலைமை வகித்தாா். மாவட்ட துணைத் தலைவா் ஜோசப் ராஜ் திருப்பதி, செயலாளா் பிரிட்டோ, பொருளாளா் ரவீந்திரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில் திமுக தோ்தல் அறிக்கையில் கூறியதுபோல புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

அதேபோல கடலாடி வட்டார கல்வி மைய அலுவலக வளாகத்தில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்திற்கு வட்டாரத் தலைவா் லட்சுமி தலைமை வகித்தாா். செயலாளா் முருகானந்தம் மேனாள், மாவட்டச் செயலாளா் குருசாமி, மாவட்ட தலைவா் குலசேகர பாண்டியன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கமுதி வட்டாரக் கல்வி அலுவலகத்தில் தொடக்கப் பள்ளி ஆசிரியா் கூட்டமைப்பின் வட்டார செயலாளா் அரிகிருஷ்ணன் தலைமையில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. முன்னாள் மாவட்டச் செயலாளா் முத்துமுருகன் முன்னிலை வகித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com