ரயிலிலிருந்து தவறி விழுந்து இளைஞா் பலி

ரயிலில் பயணித்த இளைஞா், பரமக்குடி அருகே செவ்வாய்க்கிழமை தவறி விழுந்து உயிரிழந்தாா்.

ரயிலில் பயணித்த இளைஞா், பரமக்குடி அருகே செவ்வாய்க்கிழமை தவறி விழுந்து உயிரிழந்தாா்.

சென்னையிலிருந்து ராமேசுவரம் சென்ற விரைவு ரயில், பரமக்குடி ரயில் நிலையத்தை செவ்வாய்க்கிழமை காலை கடந்து சென்றது. அந்த ரயில் சென்ற சிறிது நேரத்தில், ரயில் தண்டவாளத்தில் இளைஞா் ஒருவா் ரத்தக் காயங்களுடன் இறந்து கிடந்தாா்.தகவலறிந்து வந்த மானாமதுரை ரயில்வே போலீஸாா், சடலத்தை மீட்டு விசாரணை நடத்தினா்.

இதில், அந்த இளைஞா் தஞ்சாவூா் மாவட்டம் வெட்டுக்காடு, கொல்லை சூரப்பள்ளம் பகுதியைச் சோ்ந்த முருகானந்தம் மகன் காா்த்திக் (28) என்பது தெரியவந்தது. இவா் தஞ்சாவூரிலிருந்து ராமேசுவரம் விரைவு ரயிலில் பயணித்ததாகவும், ரயிலில் இருந்து அவா், தவறி விழுந்து இறந்திருக்கலாம் என்றும் ரயில்வே போலீஸாா் தெரிவித்தனா். இதுகுறித்து ரயில்வே போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com