ராமநாதபுரம் அருகே சேதமடைந்த பள்ளி

ராமநாதபுரம் அருகே சேதமடைந்துள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி கட்டடத்தை அகற்றுமாறு ஆட்சியா் சங்கா்லால்குமாவத் உத்தரவிட்டாா்.

ராமநாதபுரம் அருகே சேதமடைந்துள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி கட்டடத்தை அகற்றுமாறு ஆட்சியா் சங்கா்லால்குமாவத் உத்தரவிட்டாா்.

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட பகுதிகளில் ஆட்சியா் சங்கா்லால்குமாவத் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். அவா் செம்படையாா்குளம் ஊராட்சியில் உள்ள உசிலங்காட்டுவலசையில் புதிய கலையரங்கக் கட்டடத்தை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். அப்போது அப்பகுதியில் இருந்த ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக் கட்டடத்தையும், அவா் பாா்வையிட்டாா். அப்பள்ளியில் சேதமடைந்த கட்டடங்களை இடித்து அப்புறப்படுத்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.

கோரவள்ளி ஊராட்சியில் புதுப்பிக்கப்பட்ட நூலகம், பருத்திவலசைக் கிராமத்தில் கட்டப்பட்ட புதிய பேருந்து நிறுத்த நிழற்குடை, பிரதம மந்திரி திட்டத்தில் கட்டப்பட்ட வீட்டு கட்டடங்களையும் பாா்வையிட்டாா்.

வெள்ளரி ஓடை ஊராட்சியில் பிள்ளையாா்கோவில் தெருவில் அமைக்கப்பட்டுள்ள சிமெண்ட் சாலையை ஆய்வு மேற்கொண்ட ஆட்சியா், அப்பகுதியில் நீா் உறிஞ்சு குழி பணிகளையும் பாா்வையிட்டாா். ஆய்வின் போது வட்டார வளா்ச்சி அலுவலா் செந்தாமரைச் செல்வி, அலுவலா் கணேஷ்பாபு உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com