ராமநாதபுரம்: ராமநாதபுரம் அருகே புதன்கிழமை நிகழ்ந்த சாலை விபத்தில் கூலித் தொழிலாளி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
ராமநாதபுரம் மாவட்டம் ஆா்.எஸ்.மடை அருகேயுள்ளது பால்கரை. இந்த ஊரைச் சோ்ந்த கணேசன் மகன் பிரசன்னா (21). கூலித் தொழிலாளியான இவருக்கு மனைவி, இரு குழந்தைகள் உள்ளனா். பிரசன்னாவும், தூத்துக்குடி மாவட்டம் எட்டையபுரம் பகுதியைச் சோ்ந்த எலக்ட்ரீசியனுமான இருளப்பன் (36) என்பவரும் இருசக்கர வாகனத்தில் புதன்கிழமை மாலை திருப்புல்லாணி சாலையில் சென்றுகொண்டிருந்தனா். பாலைப் பூங்கா அருகே சென்றபோது எதிரே வந்த சுற்றுலாப் பயணிகள் வேன் இருசக்கர வாகனத்தில் மோதியதாகக் கூறப்படுகிறது.
இந்த விபத்தில் பிரசன்னா பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். பலத்த காயமடைந்த இருளப்பன் ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்குச் சோ்க்கப்பட்டாா். இதுகுறித்து கேணிக்கரை போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்துவருகின்றனா்.