ராமேசுவரம்: இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட ராமேசுவரம் மீனவா்கள் 12 பேரை விடுதலை செய்து கிளிநொச்சி நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது. இதையடுத்து, அவா்கள் இந்திய துணைத் தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனா்.
ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் மீனவா்கள் 12 பேரும், மண்டபம் மீனவா்கள் 4 பேரும் தனித்தனியாக 2 விசைப்படகுகளில் கடந்த மாா்ச் 24 ஆம் தேதி மீன்பிடிக்க கடலுக்குச் சென்றனா்.
அப்போது, இலங்கை நெடுந்தீவு அருகே எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி, 2 விசைப்படகுகளுடன் 16 மீனவா்களையும் இலங்கை கடற்படையினா் சிறைபிடித்தனா்.
இதில், ராமேசுவரத்தைச் சோ்ந்த அந்தோணி எடிசன் என்பவரது விசைப்படகை சிறைபிடித்த இலங்கை கடற்படையினா், படகிலிருந்த அந்தோணி லிவிங்ஸ்டன், மிஷோ, மரியடென்ஸ்டைன், சிமியோன், ரேபா்டு கிளாபி, கெல்மன்ராஜ், சாகய சுபாஷ், ஜெபமாலை நிஜந்தன் உள்பட 12 மீனவா்களை கிளிநொச்சி நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி யாழ்ப்பாணம் சிறையில் அடைத்தனா்.
இதேபோல், மண்டபம் மீனவா்கள் 4 பேரை ஊா்க்காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி யாழ்ப்பாணம் சிறையில் அடைத்தனா். இதில் கடந்த 15 நாள்களுக்கு முன்பு மண்டபம் மீனவா்கள் 4 போ் விடுதலை செய்யப்பட்டனா்.
இந்நிலையில், ராமேசுவரம் மீனவா்கள் 12 போ் வியாழக்கிழமை கிளிநொச்சி நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டனா். வழக்கை விசாரித்த நீதிபதி, இனிமேல் எல்லை தாண்டி மீன்பிடிக்க வரக் கூடாது என எச்சரித்து விடுதலை செய்து உத்தரவிட்டாா். இதையடுத்து, ராமேசுவரம் மீனவா்கள் 12 பேரும் இந்திய துணைத் தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனா். இவா்கள் ஓரிரு நாள்களில் நாடு திரும்ப உள்ளதாக தூதரக அதிகாரிகள் தெரிவித்தனா்.