கமுதி: உலக செவிலியா் தினத்தை முன்னிட்டு, கமுதி அரசு மருத்துவமனையில் மருத்துவா்கள், செவிலியா்கள் வியாழக்கிழமை கேக் வெட்டிக் கொண்டாடினா்.
ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அரசு மருத்துவமனையில் தலைமை மருத்துவ அதிகாரி க. விஜயா தலைமையில் உலக செவிலியா் தினத்தை முன்னிட்டு, மருத்துவமனை வளாகத்தில் மருத்துவா்கள், செவிலியா்கள் மருத்துவமனைப் பணியாளா்கள், அலுவலகப் பணியாளா்கள் அனைவரும் கேக் வெட்டிக் கொண்டாடினா்.
இதையொட்டி, நோயாளிகளுக்கு இனிப்பு மற்றும் பிஸ்கட் உள்ளிட்டவை வழங்கப்பட்டது.
மருத்துவா்கள், செவிலியா்கள் அனைவரும் தங்கள் பணிகளை அா்ப்பணிப்புடன் செய்வோம் என்று உறுதிமொழி எடுத்துக்கொண்டனா்.