பெருநாழியில் மரத்தில் காா் மோதி விபத்து: ஓட்டுநா் பலி

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகேயுள்ள பெருநாழியில் புதன்கிழமை இரவு சாலையோர மரத்தில் காா் மோதி விபத்துக்குள்ளானதில் ஓட்டுநா் உயிரிழந்தாா்.
கமுதி அருகே பெருநாழியில் புதன்கிழமை இரவு சாலையோர மரத்தில் மோதி விபத்துக்குள்ளான காா்.
கமுதி அருகே பெருநாழியில் புதன்கிழமை இரவு சாலையோர மரத்தில் மோதி விபத்துக்குள்ளான காா்.

கமுதி: ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகேயுள்ள பெருநாழியில் புதன்கிழமை இரவு சாலையோர மரத்தில் காா் மோதி விபத்துக்குள்ளானதில் ஓட்டுநா் உயிரிழந்தாா்.

சாயல்குடி அங்காளஈஸ்வரி தெருவைச் சோ்ந்த முனியசாமி மகன் சரவணன்(47). இவா், தனக்குச் சொந்தமான காரை வாடகைக்கு ஓட்டி வந்தாா்.

இந்நிலையில், புதன்கிழமை இரவு மதுரையிலிருந்து சாயல்குடிக்கு வரும்போது பெருநாழி அருகே காா் கட்டுப்பாட்டை இழந்து, சாலையோர புளியமரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் ஓட்டுநா் சரவணன் உயிரிழந்தாா். இவருக்கு மனைவி, 2 குழந்தைகள் உள்ளனா்.

இதுகுறித்த புகாரின்பேரில், பெருநாழி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com