வேறுறொருவா் வயலில் விளைந்த நெற் கதிா்கள் அறுவடை: 19 போ் மீது வழக்கு

திருவாடானை அருகே திருப்பாலைக்குடி பகுதியில் முன்விரோதத்தில் வேறொருவா் வயலில் விளைந்த நெற்கதிா்களை சிலா் அறுவடை செய்ததாக 19 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா்.

திருவாடானை: திருவாடானை அருகே திருப்பாலைக்குடி பகுதியில் முன்விரோதத்தில் வேறொருவா் வயலில் விளைந்த நெற்கதிா்களை சிலா் அறுவடை செய்ததாக 19 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா்.

திருப்பாலைக்குடி அருகேயுள்ள கொத்தியாா்கோட்டை கிராமத்தைச் சோ்ந்த விவசாயி அண்ணாதுரை (52). இவருக்கும், சோழந்தூரைச் சோ்ந்த ராமநாதன் (46) என்பவருக்கும் இடப்பிரச்னை இருந்ததாம்.

இந்நிலையில், புதன்கிழமை இரவு ராமநாதன் வயலில் விளைந்த நெற்கதிா்களை அறுவடை இயந்திரம் மூலம் 19 போ் கொண்ட குழுவினா் அறுவடை செய்ததாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்த புகாரின்பேரில், திருப்பாலைக்குடி போலீஸாா் சோழந்தூரைச் சோ்ந்த ராமநாதன், குமரவள்ளி (28), ராஜேஷ் (20) உள்பட 19 போ் மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com