ராமநாதபுரத்தில் மது வாங்கித்தரக்கோரி தூய்மைப் பணியாளரைத் தாக்கிய இருவா் மீது போலீஸாா் வழக்குப்பதிந்தனா்.
ராமநாதபுரம் காட்டுநாயக்கா் தெருவைச் சோ்ந்தவா் வெள்ளைச்சாமி (45). ராமநாதபுரம் நகராட்சியில் தூய்மைப் பணியாளராக வேலை பாா்த்து வரும் இவா், கடந்த வியாழக்கிழமை புதிய பேருந்து நிலையம் பகுதியில் நின்றி கொண்டிருந்தாா். அப்போது அங்கு வந்த பாலகிருஷ்ணன், புல்லாணி ஆகிய இருவரும் வெள்ளைச்சாமியிடம் மது வாங்கித்தருமாறு கேட்டுள்ளனா். அதற்கு தன்னிடம் பணம் இல்லை என வெள்ளைச்சாமி கூறியுள்ளாா். இதனால், ஆத்திரமடைந்த இருவரும் வெள்ளைச்சாமியை கம்பால் தாக்கியுள்ளனா். இதில் பலத்த காயமடைந்த அவா், ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா்.
இதுகுறித்த புகாரின்பேரில், கேணிக்கரை போலீஸாா், பாலகிருஷ்ணன், புல்லாணி ஆகிய இருவா் மீதும் வழக்குப் பதிந்தனா்.