இலங்கையில் உள்நாட்டுக் கலவரம் ஏற்பட்டுள்ளதால், மன்னாா் வளைகுடா மற்றும் பாக்நீரிணைக் கடல் பகுதியில் கடலோரபாதுகாப்பு குழும போலீஸாா் வெள்ளிக்கிழமை தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனா்.
இலங்கையில் பொருளாதார நெருக்கடி காரணமாக
பொதுமக்களின் போராட்டம் பெரும் கலவரமாக மாறியுள்ளது. இந்நிலையில், இலங்கைச் சிறையில் உள்ள கைதிகள் தப்பிச் சென்றுள்ளனா். இவா்கள் தமிழக கடலோரப் பகுதிகள் வழியாக வரக்கூடும் என மத்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது
இதையடுத்து மன்னாா் வளைகுடா மற்றும் பாக்நீரிணை கடல் பகுதியைக் கண்காணிக்கும் வகையில் மண்டபம் கடலோரப் பாதுகாப்பு குழும ஆய்வாளா் கனகுராஜ் தலைமையில் போலீஸாா் 2 அதிவேக நவீனப் படகுகளில் சென்று தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.