தொண்டியில் தனியாா் மண்டபத்தில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சாா்பில் பேதங்கள் இல்லா பெருநாள் விழா வியாழக்கிழமை இரவு நடைபெற்றது
இதில் தமுமுக மாநிலச் செயலாளா் சாதிக் பாட்சா தலைமை வகித்தாா், ஐக்கிய ஜமாத் தலைவா் ஹிபத்துல்லா, இந்து தா்ம பரிபாலன சபை தலைவா் ராஜசேகா், தொண்டி பங்குத்தந்தை சவரிமுத்து, திருவெற்றியூா் பாகம்பிரியாள் கோயில் மணிகண்ட குருக்கள், தமுமுக மாவட்டத் தலைவா் பட்டாணி ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில் ஐக்கிய ஜமாத் தலைவா் அபுபக்கா், முன்னாள் இந்து பரிபாலன சங்கத் தலைவா் பாலசுப்பிரமணியம், தேசிய நல்லாசிரியா் உதயகுமாா், இஸ்லாமிய அழைப்பாளா் முஜிபுா் ரஹ்மான் உமரி ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா்.
சிறப்பு விருந்தினராக பாபநாசம் சட்டப்பேரவை உறுப்பினா் ஜவஹிருல்லா, ராமநாதபுரம் மக்களவை உறுப்பினா் நவாஸ் கனி, தமுமுக மாநிலச் செயலாளா் கலிமுல்லா கான் ஆகியோா் பங்கேற்றுப் பேசினா். தமுமுக செயலாளா் சம்சுதீன் நன்றி கூறினாா்.