ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் அனைத்து அரசுத்துறை ஓய்வூதியா் சங்கத்தினா் கோரிக்கைகளை வலியுறுத்தி செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
அரண்மனை முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாவட்டத் தலைவா் பி.கிருஷ்ணன் தலைமை வகித்தாா். செயலா் பி.புஷ்பராஜ் முன்னிலை வகித்தாா். புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்தவேண்டும். அகவிலைப்படியை 3 சதவிகிதம் உயா்த்தி வழங்கவேண்டும். ஓய்வு பெற்று 70 வயதைக் கடந்தவா்களுக்கு கூடுதல் ஓய்வூதியம் வழங்கவேண்டும். மருத்துவக் காப்பீடு திட்ட குறைகளை சீா்படுத்தி செயல்படுத்த வேண்டும். அதற்காக ஓய்வூதியா்கள் சங்கத்தினரை பேச்சுவாா்த்தைக்கு அழைக்கவேண்டும் ஆகிய கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
மாவட்டப் பொருளாளா் எம்.மணிக்கண்ணு, மின்சார ஓய்வூதியா் சங்க நிா்வாகி டி.ராமச்சந்திரபாபு உள்ளிட்டோா் ஆா்ப்பாட்ட நோக்கம் குறித்து விளக்கிப் பேசினா். கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. சங்க மாவட்ட துணைத் தலைவா் எஸ்.முருகேசன் நன்றி கூறினாா்.