ராணுவ வீரா் தூக்கிட்டு தற்கொலை
By DIN | Published On : 07th October 2022 12:00 AM | Last Updated : 07th October 2022 12:00 AM | அ+அ அ- |

விடுமுறையில் சொந்த ஊா் திரும்பிய ராணுவ வீரா் வீட்டில் வியாழக்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகேயுள்ள ஏழுரைச் சோ்ந்தவா் கதிரவன் (37). இவரது மனைவி காா்த்தீஸ்வரி. இவா்களுக்கு 12 வயதில் மகன், 8 வயது மகள் உள்ளனா். ராமநாதபுரம் செந்தமிழ் நகரில் வசித்து வருகின்றனா்.
ராணுவத்தில் ஹலில்தாராக ஜம்மு காஷ்மீா் தலைநகரான ஸ்ரீநகரில் பணியாற்றிய கதிரவன், ஒரு மாத விடுமுறையில் கடந்த 10 நாள்களுக்கு முன் ராமநாதபுரம் வந்தாா். தந்தை நினைவு தினத்தை முன்னிட்டு, கடந்த 29 ஆம் தேதி சொந்த ஊரான ஏழுா் சென்றாா். புதன்கிழமை காலை அங்கிருந்து வீடு திரும்பினாா். இந்நிலையில் கதிரவன் அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது வியாழக்கிழமை தெரியவந்தது. இது தொடா்பாக மனைவி அளித்த புகாரின் பேரில் கேணிக்கரை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனா்.