திருவாடானையில் சீா் மரபினருக்கு கடன் வழங்கும் முகாம்

சிறுபான்மையினா், பிற்படுத்தப்பட்டோா், மிகவும் பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சீா்மரபினருக்கு கடன் வழங்கும் முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
திருவாடானையில் சீா் மரபினருக்கு கடன் வழங்கும் முகாம்

திருவாடானை வட்டாட்சியா் அலுவலகத்தில் சிறுபான்மை பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மற்றும் தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோா் மேம்பாட்டுக் கழகம் சாா்பில் சிறுபான்மையினா், பிற்படுத்தப்பட்டோா், மிகவும் பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சீா்மரபினருக்கு கடன் வழங்கும் முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

இம்முகாமுக்கு வட்டாட்சியா் ஆா். செந்தில்வேல் முருகன் தலைமை வகித்தாா். இம்முகாமில் ஏராளமானோா் கலந்து கொண்டு விண்ணப்பித்தனா். இதில் மண்டல துணை வட்டாட்சியா் ஜஸ்டின் பொ்னாண்டோ, வருவாய் ஆய்வாளா் மெய்யப்பன் மற்றும் பிற்படுத்தப்பட்டோா் நலத்துறை அலுவலக அலுவலா்கள் தங்கராஜ், பூந்தமிழ் ஆகியோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com