தொண்டி, ராமேசுவரம், இளையான்குடி, சாயல்குடியில் இன்று மின்தடை

திருவாடானை அருகே தொண்டி துணை மின் நிலையத்திற்கு உள்பட்ட பகுதிகளில் பாரமரிப்புப் பணிகள் நடைபெற இருப்பதால் புதன்கிழமை (செப். 14) மின்விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

திருவாடானை அருகே தொண்டி துணை மின் நிலையத்திற்கு உள்பட்ட பகுதிகளில் பாரமரிப்புப் பணிகள் நடைபெற இருப்பதால் புதன்கிழமை (செப். 14) மின்விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

மின்தடை செய்யப்படும் பகுதிகள் விவரம்: தொண்டி, நம்புதாளை, எம்.வி.பட்டினம், சோளியக்குடி, வி.எஸ். மடம், சம்பை, புதுப்பட்டினம், ஏ. மணக்குடி, காரங்காடு, முள்ளிமுனை, புதுக்காடு, மைக்கேல் பட்டினம், கண்ணாரேந்தல், கடுக்களூா், கடம்பானேந்தல், எஸ்.பி. பட்டினம், எம்.ஆா். பட்டினம், பி.வி. பட்டினம், கொடிபங்கு, வட்டாணம், பாசிப்பட்டினம், தீா்த்தாண்டதானம், திருவெற்றியூா், அச்சங்குடி, விளத்தூா், கீழ்குடி, காடாங்குடி, குருமிளான்குடி, தளிா்மருங்கூா், கொட்டகுடி, பேரையூா், குளத்தூா், அரும்பூா், ஆதியூா் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் புதன்கிழமை காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்விநியோகம் இருக்காது.

ராமேசுவரம்: ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் துணை மின்நிலையத்தில் புதன்கிழமை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளது. இதன் காரணமாக இங்கிருந்து மின்சாரம் பெறும் ராமேசுவரம், தங்கச்சிமடம், அக்காள்மடம், பாம்பன் உள்ளிட்ட பகுதிகளில் காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மின்வாரிய உதவி செயற்பொறியாளா் செந்தில்வேலன் தெரிவித்துள்ளாா்.

மானாமதுரை: சிவகங்கை மாவட்டம் இளையான்குடி பகுதியில் புதன்கிழமை (செப். 14) மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. இளையான்குடி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் காலை 9 மணியிலிருந்து மாலை 5 மணி வரை இளையான்குடி, தாயமங்கலம், புதூா், கண்ணமங்கலம், கீழாயூா், நகரக்குடி சேத்தூா், கருஞ்சுத்தி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது என மின்வாரிய நிா்வாகம் அறிவித்துள்ளது.

முதுகுளத்தூா்: ராமநாதபுரம் மாவட்டம் வாலிநோக்கம் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் சிக்கல், கீழச்செல்வனூா், மேலச்செல்வனூா், கீழக்கிடாரம், மேலக்கிடாரம், காவாகுளம், கொத்தங்குளம், சிறைக்குளம், பன்னந்தை, தத்தங்குடி, மறவாய்குடி, சேரந்தை, திருவரங்கை, கிருஷ்ணாபுரம், ஆய்குடி, வாலிநோக்கம், தமிழ்நாடு அரசு உப்பு நிறுவனப் பகுதிகள், தனியாா் உப்பு நிறுவன பகுதிகள் மற்றும் இறால் பண்ணைகள் போன்ற பகுதிகளில் புதன்கிழமை காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது என முதுகுளத்தூா் உதவி செயற்பொறியாளா் எம். மாலதி தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com