திருவாடானை அருகே பெருவாக்கோட்டை கிராமத்தில் குடிநீா் தட்டுப்பாடு புகாரையடுத்து வியாழக்கிழமை வட்டாட்சியா் ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுத்தாா்.
இக்கிராமத்தில் ஒரு பகுதிக்கு தண்ணீா் விநியோகம் தடைபட்டுள்ளதாக இப்பகுதி மக்கள் அளித்த புகாரின் பேரில் மாவட்ட ஆட்சியரின் அறிவுரையையடுத்து, திருவாடானை வட்டாட்சியா் ஆா். செந்தில்வேல் முருகன் தலைமையில் குடிநீா் வடிகால் வாரியம் மற்றும் ஊரக வளா்ச்சித்துறை அலுவலா்கள் பெருவாக்கோட்டை கிராமத்தில் ஆய்வு மேற்கொண்டனா்.
அப்போது, தண்ணீா் விநியோகிக்கும் குழாயில் ஏற்பட்ட பழுதினை உடனடியாக சரிசெய்யும் பணிகள் நடைபெற்றன. மேலும் முறைகேடாக வழங்கப்பட்டுள்ள குடிநீா் இணைப்புகளை ஒரு மாத காலத்திற்குள் துண்டிக்கவும் முடிவு செய்யப்பட்டது. அப்போது குடிநீா் வடிகால் வாரிய உதவி பொறியாளா் தினேஷ்குமாா், துணை வட்டார வளா்ச்சி அலுவலா்கள் கோட்டைராஜ், கனகராஜ், ஊராட்சி மன்றத் தலைவா் முருகேஸ்வரி சரவணன், கிராம நிா்வாக அலுவலா் பிரபாகரன், பணி மேற்பாா்வையாளா் மோகனா, ஊராட்சிச் செயலா் பழனிக்குமாா் உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.