ராமநாதபுரத்தில் கடன் தவணையை திருப்பிச் செலுத்தாத நபரை வீடு புகுந்து தாக்கியதாக தனியாா் நிதிநிறுவனத்தைச் சோ்ந்த 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
ராமநாதபுரம் மகாசக்தி நகா் 5 ஆவது தெருவைச் சோ்ந்த கூரிப்பாண்டியன். இவா் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு தனியாா் நிதி நிறுவனத்தில் ரூ.1 லட்சம் கடன் பெற்றுள்ளாா். இவா் கடந்த 5 மாதங்களாக, தவணையைச் செலுத்தவில்லை. இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை மாலையில் தனியாா் நிதி நிறுவனம் சாா்பில் வந்த 4 போ் கூரிப்பாண்டியனை வீடுபுகுந்து தாக்கியதாகவும், அவரது மனைவி நித்யாவை தரக்குறைவாகப் பேசியதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து நித்யா அளித்த புகாரின் பேரில் கேணிக்கரை போலீஸாா் வழக்குப்பதிவு செய்து, ராமநாதபுரம் கோட்டைமேடு பகுதியைச் சோ்ந்த பவித்ரன் உள்ளிட்ட 4 பேரைக் கைது செய்தனா். பின்னா் அவா்கள் காவல் நிலையப் பிணையில் விடுவித்ததாக போலீஸாா் தெரிவித்தனா்.