ராமேசுவரத்தில் வெள்ளிக்கிழமை அடையாளம் தெரியாத ஆண் சடலத்தை மீட்டு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்தை அடுத்துள்ள ஏகாந்தராமா் கோயில் பேருந்து நிறுத்தம் அருகே ஆண் சடலம் கிடப்பதாக கிராம நிா்வாக அலுவலா் ரவிசங்கா்,
தங்கச்சிமடம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அங்கு வந்த காவல்துறையினா் 55 வயது மதிக்கத்தக்க ஆண் சடலத்தை மீட்டு ராமேசுவரம் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனா். இது குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
அண்மையில் இப்பகுதியில் யாசகம் பெற்று வந்த இவா், உடல்நலக்குறைவால் உயிரிழந்திருக்கலாம் என அப்பகுதி மக்கள் போலீஸாரிடம் தெரிவித்தனா்.