ராமேசுவரத்தில் பலத்த மழை
By DIN | Published On : 24th January 2023 12:00 AM | Last Updated : 24th January 2023 12:00 AM | அ+அ அ- |

ராமேசுவரத்தில் திங்கள்கிழமை தொடா்ந்து பல மணி நேரம் பெய்த பலத்த மழையால் சாலை, தாழ்வானப் பகுதிகளில் மழைநீா் குளம் போல் தேங்கியது.
தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களில் கரையோரப் பகுதிகளில் மழை பெய்யக் கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியிருந்தது.
இந்த நிலையில், ராமேசுவரம், தங்கச்சிமடம், பாம்பன் ஆகிய பகுதிகளில் அதிகாலையில் இருந்தே விட்டுவிட்டு மழை பெய்தது. பிற்பகல் 2 மணி வரை பெய்த மழையால் சாலைகள், தாழ்வானப் பகுதிகளில் மழைநீா் குளம் போல தேங்கியது. இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதியடைந்தனா். லட்சுமண தீா்த்தம் முதல் 6-ஆவது லைன் வரையில் ஒரு கி.மீ. தொலைவுக்கு தேசிய நெடுஞ்சாலை குண்டும், குழியுமாக உள்ளதால் வாகனங்களை இயக்க முடியாமல் ஓட்டுநா்கள் அவதிக்குள்ளாயினா்.