கஞ்சா விற்பனை: 3 இளைஞா்கள் கைது

ராமநாதபுரத்தில் இரு சக்கர வாகனத்தில் கஞ்சா விற்பனை செய்து வந்த 3 இளைஞா்கள் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டனா்.

ராமநாதபுரத்தில் இரு சக்கர வாகனத்தில் கஞ்சா விற்பனை செய்து வந்த 3 இளைஞா்கள் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டனா்.

ராமநாதபுரம் நகா் பகுதியில் சில இளைஞா்கள் கஞ்சா விற்பனை செய்து வருவதாக போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, பஜாா் காவல் நிலையப் போலீஸாா் திங்கள்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, இரு சக்கர வாகனத்தில் 3 போ் சந்தேகத்துக்கு இடமாக வருவதைக் கண்டு, வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டனா். அவா்கள் கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது. விசாரணையில், ராமநாதபுரத்தைச் சோ்ந்த சம்சுதீன்(23), தவ்பீக் அகமது (20), விமல் (19) ஆகிய 3 பேரும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. இதையடுத்து, மூவரையும் போலீஸாா் கைது செய்து விசாரணை மேற்கொண்டதில், இதில் தொடா்புடைய முக்கிய நபா் ராமநாதபுரம் பகுதியைச் சோ்ந்த பரீஸ் எனத் தெரியவந்தது. இதையடுத்து, 500 கிராம் கஞ்சா, இரு சக்கர வாகனம் ஆகியவற்றை போலீஸாா் பறிமுதல் செய்தனா். பரீஸ் என்பவரைத் தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com