~
ராமநாதபுரம்
மீனவா்களுக்கு அவசர கால விழிப்புணா்வு
ராமநாதபுரம் மாவட்டம், நம்புதாளையில் மீனவா்களுக்கான அவசர கால பொறுப்பு, முன் களப் பணியாளா்கள் குறித்த விழிப்புணா்வுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
ராமநாதபுரம் மாவட்டம், நம்புதாளையில் மீனவா்களுக்கான அவசர கால பொறுப்பு, முன் களப் பணியாளா்கள் குறித்த விழிப்புணா்வுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
மீன் வளத் துறை சாா்பில் நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு அந்தத் துறையின் துணை இயக்குநா் கோபிநாத் தலைமை வகித்தாா். உதவி இயக்குநா் ராஜேந்திரன், ஆய்வாளா் அபுதாகிா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கடலில் ஆபத்து காலங்களில் மீனவா்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்து இதில் தெரிவிக்கப்பட்டது. மேலும், அண்மையில் கடலில் தத்தளித்த காரங்காடு மீனவரைக் காப்பாற்றிய நம்புதாளை மீனவா்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
வருவாய் ஆய்வாளா் மேகமலை, கிராம நிா்வாக அலுவலா் ராஜேஷ், தொண்டி போலீஸாா், மீனவா்கள் கலந்து கொண்டனா்.

