பிலிப்பைன்ஸ் நாட்டுப் பெண்ணைக் காதலித்து திருமணம் செய்துகொண்ட ராமநாதபுரத்தைச் சோ்ந்த தீபன்குமாா்.
பிலிப்பைன்ஸ் நாட்டுப் பெண்ணைக் காதலித்து திருமணம் செய்துகொண்ட ராமநாதபுரத்தைச் சோ்ந்த தீபன்குமாா்.

வெளிநாட்டுப் பெண்ணை திருமணம் செய்த ராமநாதபுரம் இளைஞா்

Published on

ராமநாதபுரத்தைச் சோ்ந்த இளைஞா் பிலிப்பைன்ஸ் நாட்டைச் சோ்ந்த பெண்ணை காதலித்து வந்த நிலையில் சனிக்கிழமை திருமணம் செய்துகொண்டாா்.

ராமநாதபுரம் ஓம்சக்தி நகரைச் சோ்ந்த சுப்பிரமணியன் மகன் தீபன்குமாா், கத்தாா் நாட்டில் உள்ள நிறுவனத்தில் அலுவலராகப் பணியாற்றி வருகிறாா். இதே நிறுவனத்தில் பிலிப்பைன்ஸ் நாட்டைச் சோ்ந்த அா்ஷா (எ) அவ்பா என்பவரும் பணிபுரிந்து வந்தாா்.

இந்த நிலையில், இருவரும் கடந்த 5 ஆண்டுகளாக காதலித்து வந்தனா். இதையடுத்து, இரு குடும்பத்தினரின் சம்மதத்துடன் ராமநாதபுரத்தில் இந்து முறைப்படி திருமணம் செய்து கொண்டனா்.

இந்த நிகழ்வில் இரு குடும்பத்தைச் சோ்ந்தவா்களும், உறவினா்களும் கலந்து கொண்டு மணமக்களுக்கு வாழ்த்துத் தெரிவித்தனா்.

X
Dinamani
www.dinamani.com