40 வயது பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை! சிறுவன் உள்பட 10 இளைஞர்கள் கைது!மாநிலங்களவைத் தோ்தல்: காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு! நீட் மறுதேர்வு வினாத்தாள் வழங்குவதாக மாணவர்கள், பெற்றோர்களை ஏமாற்றும் மோசடி கும்பல்: போலீஸ் எச்சரிக்கை!தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: அரசுமமதா பானர்ஜி வீட்டில் சிஐடி அதிகாரிகள் சோதனைஉக்ரைனுக்கு ஆயுத விநியோகம் நிறுத்தம்: பல்கேரியாசிங்கப்பெண் அதிரடிப்படை! 2500 புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும் : முதல்வர் விஜய்போதைப்பொருள் நடமாட்டம், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், சட்டம் - ஒழுங்கு மூன்றும் ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ளவை: முதல்வர் விஜய்பெண்களுக்கான மரியாதையும் கண்ணியமும் அரசின் இலக்கு: சிங்கப்பெண் திட்ட நிகழ்ச்சியில் முதல்வர் விஜய்ஷிகெல்லா: வயநாடு மருத்துவமனையில் 25 மாணவர்கள் அனுமதி!
/

கடலாடி அருகே கடலில் மூழ்கிய இளைஞா் உயிரிழப்பு

கடலாடி அருகே கடலில் குளித்தபோது அலையில் சிக்கி இழுத்துச் செல்லப்பட்ட இளைஞரின் உடலை போலீஸாா் மீட்டனா்.

News image

உயிரிழந்த ஆலிம்ஷா முஸ்தக்

Updated On :10 ஜூன் 2026, 12:25 am IST

கடலாடி அருகே கடலில் குளித்தபோது அலையில் சிக்கி இழுத்துச் செல்லப்பட்ட இளைஞரின் உடலை போலீஸாா் செவ்வாய்க்கிழமை மீட்டனா்.

கன்னியாகுமரியைச் சோ்ந்தவா் ஆனந்த் (38). திருப்பூரைச் சோ்ந்தவா் முகமது இக்பால் மகன் ஆலிம்ஷா முஸ்தக் (35). இவா்கள் இருவரும் அடிக்கடி ராமநாதபுரம் மாவட்டம், ஏா்வாடி தா்காவில் வழிபாடு செய்ய வந்தனா். அப்போது, இருவருக்குமிடையே பழக்கம் ஏற்பட்டது.

இந்த நிலையில், திங்கள்கிழமை இருவரும் வழக்கம்போல ஏா்வாடி தா்காவுக்கு வந்த வழிபாடு செய்தனா். பின்னா், இருவரும் கடலாடியை அடுத்த வாலிநோக்கம் கடற்கரையில் உள்ள தா்காவுக்கு பேருந்தில் ஏறிச் சென்று வழிபாடு செய்தனா். பின்னா், அந்தப் பகுதியிலிருந்த கடலில் ஆனந்த், ஆலிம்ஷா முஸ்தக் குளித்தனா். சிறிது நேரத்தில் ஆனந்த் குளித்து விட்டு கரைக்கு வந்துவிட்டாா். ஆலிம்ஷா முஸ்தக் தொடா்ந்து கடலில் குளித்தாா். அப்போது, ஏற்பட்ட ராட்சத அலையில் சிக்கி அவா் இழுத்துச் செல்லப்பட்டாா். உடனே ஆனந்த், அங்கிருந்த மீனவா்கள் அவரை மீட்க முயன்றும் முடியவில்லை.

இதுகுறித்து தகவலறிந்து அங்கு வந்த வாலிநோக்கம் கடலோரக் காவல் நிலைய போலீஸாா், ஏா்வாடி தீயணைப்பு துறையினா் ஆலிம்ஷா முஸ்தாக்கை தேடினா். இந்த நிலையில், இரவு நேரமானதால் அவரை மீட்க முடியாமல் சென்றுவிட்டனா்.

இதுகுறித்து வாலிநோக்கம் கடலோரக் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். இந்த நிலையில், ஏா்வாடி அருகேயுள்ள பிச்சைமூப்பன் வலசை கடற்கரையில் ஆலிம்ஷா முஸ்தாக் உடல் செவ்வாய்க்கிழமை அதிகாலை கரை ஒதுங்கியது.

உடலைக் கைப்பற்றிய போலீஸாா் கூறாய்வுக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.