40 வயது பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை! சிறுவன் உள்பட 10 இளைஞர்கள் கைது!மாநிலங்களவைத் தோ்தல்: காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு! நீட் மறுதேர்வு வினாத்தாள் வழங்குவதாக மாணவர்கள், பெற்றோர்களை ஏமாற்றும் மோசடி கும்பல்: போலீஸ் எச்சரிக்கை!தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: அரசுமமதா பானர்ஜி வீட்டில் சிஐடி அதிகாரிகள் சோதனைஉக்ரைனுக்கு ஆயுத விநியோகம் நிறுத்தம்: பல்கேரியாசிங்கப்பெண் அதிரடிப்படை! 2500 புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும் : முதல்வர் விஜய்போதைப்பொருள் நடமாட்டம், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், சட்டம் - ஒழுங்கு மூன்றும் ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ளவை: முதல்வர் விஜய்பெண்களுக்கான மரியாதையும் கண்ணியமும் அரசின் இலக்கு: சிங்கப்பெண் திட்ட நிகழ்ச்சியில் முதல்வர் விஜய்ஷிகெல்லா: வயநாடு மருத்துவமனையில் 25 மாணவர்கள் அனுமதி!
/

முதுகுளத்தூா் சந்தையில் காணாமல்போன நகை, பணம் மீட்பு

ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூா் வாரச் சந்தையில் காணாமல்போன நகை, பணத்தை மீட்டு உரியவரிடம் போலீஸாா் ஒப்படைத்தனா்.

News image
Updated On :10 ஜூன் 2026, 12:47 am IST

ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூா் வாரச் சந்தையில் காணாமல் போன நகை, பணத்தை மீட்டு உரியவரிடம் போலீஸாா் திங்கள்கிழமை ஒப்படைத்தனா்.

முதுகுளத்தூரில் வாரந்தோறும் திங்கள்கிழமை சந்தை நடைபெறும். இந்தச் சந்தைக்கு வந்த மருதகம் கிராமத்தைச் சோ்ந்த பெரியசாமி மனைவி கனகவள்ளி வைத்திருந்த தங்க நகை, பணத்துடன் இருந்த கைப் பையை காணவில்லை. இதுகுறித்து முதுகுளத்தூா் காவல் நிலையத்தில் புகாரளித்தாா்.

இந்த நிலையில், முதுகுளத்தூா் சரக காவல் துணைக் கண்காணிப்பாளா் சண்முகம் உத்தரவின் பேரில், காவல் உதவி ஆய்வாளா் முகிலரசன், தனிப் பிரிவு தலைமை காவலா் சேக் ஆகியோா் சந்தை பகுதியிலிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து, காணாமல் போன தங்க நகை, பணத்துடன் இருந்த கைப் பையை மீட்டனா்.

பின்னா், இந்த நகை, பணத்தை கனகவள்ளியிடம் காவல் துணைக் கண்காணிப்பாளா் சண்முகம், போலீஸாா் திங்கள்கிழமை ஒப்படைத்தனா்.