மாட்டிறைச்சிக்கு தடை விதித்த மத்திய அரசைக் கண்டித்து அனைத்துக் கட்சி சார்பில் சிவகங்கையில் புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சிவகங்கை அரண்மனை வாசல் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலர் மு. கந்தசாமி தலைமை வகித்தார். திமுக வழக்குரைஞர் அணியின் மாவட்ட அமைப்பாளர் ஆதி அழகர்சாமி முன்னிலை வகித்தார்.
இதில், இறைச்சிக்காக மாடுகளை விற்கத் தடை விதித்த மத்திய அரசைக் கண்டித்து முழக்கங்களை எழுப்பினர். மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்டச் செயலர் கமருல் ஜமால், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் காளையார்கோவில் நகர செயலர் விஜயன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் தண்டியப்பன், முத்துராமலிங்கபூபதி, வீரையா, நகரச் செயலர் மதி, மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலர் ஜீவா உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.