சிறுமி பாலியல் கொலையை கண்டித்து தமுமுக ஆர்ப்பாட்டம்

ஜம்மு-காஷ்மீர் மாநிலம், கதுவாவில் 8 வயது சிறுமி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து, கொல்லப்பட்டதற்கு நீதிகேட்டு, சிவகங்கையில் தமிழ்நாடு முஸ்லிம்

ஜம்மு-காஷ்மீர் மாநிலம், கதுவாவில் 8 வயது சிறுமி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து, கொல்லப்பட்டதற்கு நீதிகேட்டு, சிவகங்கையில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தினர் ஞாயிற்றுக்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
  சிவகங்கை அரண்மனை வாசல் முன், நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு தமுமுக மாவட்டச் செயலர் சூகர்னை ஷேக் தலைமை வகித்தார். இதில், சிறுமி பலாத்காரம், கொலை வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை வழங்கவும், மத்திய பாஜக அரசைக் கண்டித்தும் கோஷங்களை எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில், தமுமுகவினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
முதுகுளத்தூரில்:    முதுகுளத்தூர் பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு தமுமுக ராமநாதபுரம் மேற்கு மாவட்ட தலைவர் எஸ்.முகம்மது இக்பால் தலைமை வகித்தார். பொருளாளர் எம்.வாவா ராவுத்தர், மாவட்ட செயலாளர் முஹிதுல்லா, மமக மாவட்ட செயலாளர் தாஜ் முகம்மது ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், வழக்குரைஞர் எம்.சம்சுதீன் சேட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்ட செயலாளர் வி.காசிநாதத்துரை ஆகியோர் கண்டன முழக்கமிட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com