ஓய்வு பெற்ற தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் சென்னையில் நாளை ஆர்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் நாளை(ஏப்.18) புதன்கிழமை ஓய்வு  பெற்ற தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் சார்பில்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் நாளை(ஏப்.18) புதன்கிழமை ஓய்வு  பெற்ற தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளதாக தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி(ஓய்வு பெற்றோர் பிரிவு) சிவகங்கை மாவட்டச் செயலர் ஏ.ஆறுமுகம்  தெரிவித்துள்ளார். 
   இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: 
  மத்திய அரசுக்கு இணையான குடும்ப ஓய்வூதியம் வழங்க வேண்டும். 21 மாத ஊதிய நிலுவைத் தொகையை வழங்க வேண்டும். மருத்துவச் செலவுத் தொகை ரூ.4 லட்சமாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 7அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை ஏப்ரல் 18-ஆம் தேதி புதன்கிழமை காலை 10.30 மணியளவில் சென்னையில்  சேப்பாக்கம் அருகே உள்ள விருந்தினர் மாளிகை முன்பு  தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி (ஓய்வு பெற்றோர்  பிரிவு) சார்பில் கவன ஈர்ப்பு  ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
   இந்த ஆர்ப்பாட்டத்திற்கு, சிவகங்கை மாவட்ட தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி (ஓய்வு  பெற்றோர் பிரிவு)அமைப்பிலிருந்து ஏராளமான உறுப்பினர்கள் கலந்து கொள்கின்றனர். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com