காரைக்குடி அருகே மணல் கடத்திய லாரியை போலீஸார் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்து, ஓட்டுநரை கைது செய்தனர்.
காரைக்குடியில் திருச்சி - ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் பவர்கிரிட் கார்ப்பரேசன் அருகே குன்றக்குடி காவல் நிலைய போலீஸார் வெள்ளிக்கிழமை இரவு வாகனச்சோதனையில் ஈடுபட்டனர். அப்போது காரைக்குடி வட்டம் செம்பனூரைச் சேர்ந்த கிருஷ்ணன் மகன் செல்வம் (51) டிப்பர் லாரியில் ஆற்று மணலை கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீஸார் கைது செய்தனர். மேலும் டிப்பர் லாரி யையும் பறிமுதல் செய்தனர்.