சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு அனைத்து வயதுப்பெண்களும் சென்று வழிபடலாம் என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்பை மறுசீராய்வு செய்ய வலியுறுத்தி காரைக்குடியில் சரணகோஷ ஊர்வலம் சனிக்கிழமை நடைபெற்றது.
காரைக்குடி வட்டார ஐயப்பப் பக்தர் கரிச்சாமி, செல்வராஜ் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இவ்ஊர்வலம், கண்ணதாசன் மணிமண்டபத்திலிருந்து புறப்பட்டு நூறடிச்சாலை, செக்காலைச்சாலை, கல்லுக்கட்டி வீதிகள் வழியாக கொப்புடையநாயகியம்மன் கோயில் வரை சென்றடைந்தது.
ஊர்வலத்தில் உச்சநீதிமன்றத்தீர்ப்பை மறுசீராய்வு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி ஆண் மற்றும் பெண் பக்தர்கள் பதாகைகள் ஏந்திச் சென்றனர். அப்போது சரணம் ஐயப்பா என்ற கோஷங்களை எழுப்பினர்.