சிவகங்கை மாவட்டம் மானாமதுரை வாரச்சந்தைக்கு அக்டோபர் 23 ஆம் தேதி பொதுஏலம் நடத்த பேரூராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
மானாமதுரையில் ஒவ்வொரு வாரமும் வியாழக்கிழமை வாரச்சந்தை நடைபெறும். கடந்தாண்டு வாரச்சந்தைக்கு நடந்த ஏலத்தில் கடும்போட்டி காரணமாக ரூ. 85 லட்சம் வரை ஏலம்போனது. கட்டணம் வசூலிக்கும் குத்தகை காலம் விரைவில் முடிவடைய உள்ள நிலையில், மீண்டும் வாரச்சந்தைக்கு பொதுஏலம் நடத்த பேரூராட்சி நிர்வாகம் முடிவு செய்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
அதன்படி வாரச்சந்தை ஏலத்தில் கலந்து கொள்பவர்கள் ரூ. 10 லட்சம் வங்கி வரைவோலை செலுத்தி ஏலத்தில் கலந்து கொள்ளலாம். ஏலம் வரும் 23 ஆம் தேதி மானாமதுரை பேரூராட்சி அலுவலகத்தில் நடைபெறுகிறது.