முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை சிவகங்கை
லாரி - பைக் மோதல்: முதியவர் பலி
By DIN | Published On : 04th August 2019 03:50 AM | Last Updated : 04th August 2019 03:50 AM | அ+அ அ- |

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே வெள்ளிக்கிழமை மாலை இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில் முதியவர் உயிரிழந்தார். மேலும் 3 குழந்தைகள் காயமடைந்தனர்.
மானாமதுரை அருகே நெடுங்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் துரைக்கண்ணு (60). இவரது மகள் மீனாளின் மகன்கள் பாலமுருகன் (6), சக்திவேல் (5) பக்கத்து வீட்டில் வசிக்கும் கண்ணன் மகள் பூர்வீகா(5) ஆகியோர் மானாமதுரை மூங்கில்ஊருணி பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வருகின்றனர்.
மாலையில் பள்ளி முடிந்து மேற்கண்ட மூன்று குழந்தைகளையும் துரைக்கண்ணு தனது இருசக்கர வாகனத்தில் ஏற்றிக்கொண்டு வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார்.
வேதியரேந்தல் விலக்கு பகுதியில் வந்தபோது, எதிரே வந்த டிப்பர் லாரி, இருசக்கர வாகனம் மீது மோதியது. இந்த விபத்தில் துரைக்கண்ணு மற்றும் 3 குழந்தைகளும் காயமடைந்தனர்.
இவர்களை போலீஸார் மீட்டு சிவகங்கை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி துரைக்கண்ணு உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து மானாமதுரை போலீஸார் வழக்குப் பதிந்து லாரி ஓட்டுநர் சங்கரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.