சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே விராமதியில் இரட்டை மாட்டுவண்டி எல்கைப் பந்தயம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
விராமதியில் ஆண்டுதோறும் ஊர்காரர்களால் நடத்தப்படும் இரட்டை மாட்டு வண்டி பந்தயம் பெரியமாடு, சின்னமாடு, நடுமாடு, என மூன்று பிரிவுகளாக நடத்தப்பட்டது. பெரியமாடு பிரிவில் 12 ஜோடிகளும், நடுமாடு பிரிவில் 17 ஜோடிகளும், சின்னமாடு பிரிவில் 22 ஜோடிகளும் என 51 ஜோடிகள் கலந்து கொண்டன.
இதில் பெரியமாடு பிரிவில் விராமதி தையல்நாயகி கருப்பையா மாடு முதலிடத்தையும், டி.புதுப்பட்டி சின்னச்சாமி அம்பலம் மாடு 2 ஆம் இடத்தையும், போடி ஒச்சாண்டியம்மன் சுதர்சன் மாடு 3 ஆம் இடத்தையும், வெற்றி வயல் சுந்தரேசன் மாடு 4 ஆம் இடத்தையும், நடுமாடு பிரிவில் திருச்சி மேலமடை சீமான் ராஜா மாடு முதலிடத்தையும், பூக்கொல்லை காளிமுத்து சேர்வை மாடு 2 ஆம் இடத்தையும், தையல்நாயகி மாடு 3 மற்றும் பரளி செல்வி மாடு 4 ஆம் இடத்தையும் பிடித்தன. சின்னமாடு பிரிவில் பில்லமங்கலம் வாசுதேவன் மாடு முதலிடத்தையும், நெய்வாசல் பெரியசாமி மாடு 2 ஆம் இடத்தையும், கீழவளவு சக்தி அம்பலம் மாடு 3 ஆம் இடத்தையும், சின்னமங்கலம் லிங்கேஸ் மாடு 4 ஆம் இடத்தையும் பிடித்தன. வெற்றி பெற்ற மாடுகளுக்கு விராமதி மந்தையம்மன் கோயில் முன்பாக கிராம அம்பலக்காரர்கள், பந்தயக்கமிட்டியினர் பரிசுகளை வழங்கினர்.